எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியின் தாய் தேவகி தேவி மற்றும் தந்தை பான் சிங் ஆகியோர் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் பல்ஸ் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே இன்று கொல்கத்தா அணியுடன் விளையாட உள்ளது. மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வென்ற சிஎஸ்கே மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 2,023 உயிரிழந்துள்ளனர். 1,67,457 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,16,130 ஆகவும், மொத்தமாக குணடைந்தோர் எண்ணிக்கை 1,32,76,039 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 1,82,553 ஆகவும், மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 21,57,538 ஆகவும் உள்ளன.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…