நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளது . இந்த கொரோனாவால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,  நடிகர்,  நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் . அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ‌.

நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா மற்றும் தல அஜித்தின் வேதாளம் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் .  சமீபத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து ஆச்சார்யா படப்பிடிப்பை தொடங்குவதற்காக சிரஞ்சீவி கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டுள்ளார் . தற்போது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் , உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 5 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கூறியுள்ளார் .