திண்டுக்கல்லில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி…!

திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா அச்சுறுத்தலால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று குறைந்து வருவதால், அரசு பாலா தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது, 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 மாணவிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.