தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா “நெகடிவ்”

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா “நெகடிவ்”

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில ஆளுநருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது.

தெலுங்கானாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரையும் தாக்கும் கொரோனா, ஆளுநர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை.

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியை அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube