தேனியில் இன்று மட்டும் புதிதாக 16 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கொரோனாவால் 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக தேனியில் இன்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 39 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் இன்று 7பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே 149 ஆக இருந்த நிலையில், தற்போது 156 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னைதான் தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திகழ்கிறது. இதையடுத்து கோயம்புத்தூரில் 60, திண்டுக்கல் 46, திருநெல்வேலி 40, திருச்சி 36, ஈரோடு 32, நாமக்கல் 33 போன்ற மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்