அருணாசலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா.!

அருணாசலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஆர்டி-பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது என்று கூறியுள்ளார். மேலும், எனக்கு அறிகுறி எதுவும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்