மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 14,976 பேருக்கு கொரோனா…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும்  புதிதாக 14,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் கொரோனோவோல் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,66,129 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,69,155 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 2,60,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 430 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,181 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.