கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 8 ஆயரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று 8,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,536 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,28,224 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 742 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 67,061 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.