கருக்குழாயில் கருத்தரித்த பெண்ணிற்கு கொரோனா.! அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய இ.எஸ்.ஐ மருத்துவர்கள்.!

கோவையை சேர்ந்த 40வயதான பெண்ணிற்கு முதல் இருமுறை கர்ப்பமுற்று கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கருப்பையில் கரு உருவாகுவதற்கு பதிலாக கருக்குழாயில் கரு உருவாகியுள்ளது.அதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து என்பதால் ஊசி மூலம் 5 வாரங்கள் வளர்ச்சியுடைய கருவை கலைத்து பெண்ணை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.