அசாமில் பிறந்து ஒன்பது நாளே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா!

அசாமில் பிறந்து 9 நாளே ஆன பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து அவரது தாய்க்கு செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு கொரானா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி என்ற மாவட்டத்தை சேர்ந்த சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 9நாட்களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய நபர், அதாவது மிகச் சிறிய நபர் இந்த ஒன்பது நாள் ஆன பெண் குழந்தைதான்.
இந்நிலையில், அந்த குழந்தையுடன் அவரது தாயும் இருக்கிறார். அவரது குழந்தையின் தாய்க்கு கொரோனா வைரஸ் இருந்துள்ளது. ஆனால் குழந்தை பெற்றெடுத்த பின்பு அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
author avatar
Rebekal