கர்நாடகாவில் இன்று 9,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக 9-ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவானது. அந்த வகையில், இன்று 9,540 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,21,730 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 6,860 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,15,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 99,470 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 128 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6808 ஆக உயர்ந்துள்ளது.