இந்தியாவில் ஒரே நாளில் 63,489 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்தது.!

இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மற்றும் 944 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 25,89,682 ஆக உள்ளது, இதில் 6,77,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18,62,258 பேர் குணமடைந்து விடுதிரும்பியுள்ளனர். இதற்கிடையில் 49,980 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆரின் படி, ஆகஸ்ட் 15 வரை 2,93,09,703 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 7,46,608 மாதிரிகள் நேற்று மட்டும் சோதனை செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.