45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா.. 45 கடைகளும் மூடல்.!

வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 45 கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து கொன்டே தான் செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.