பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா.!

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மார்ச் 27- ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 – ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், பொதுத்தேர்வு  ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை  நடந்த அம்மாநில அரசு முடிவு செய்தது. மொத்தமாக 7 லட்சத்திற்கும்  மேற்பட்ட  மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், கர்நாடகாவில் நேற்றுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

author avatar
murugan