மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.80 லட்சத்தை கடந்தது!

மகாராஷ்டிராவில் மேலும் 14,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 14,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,80,489 ஆக உயர்ந்தது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று 355 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,072 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு 16,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,96,441 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 2,44,527 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.