இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 29,28,000ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 685 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மொத்தமாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 1,66,862 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,18,51,393 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 59,258 பேர் வீடு திருப்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube