கொரோனா எதிரொலி; 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது..!

கொரோனா எதிரொலி காரணமாக 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதனால், நேற்று இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்தது.

பிசியோ நிபுணருக்கு கொரோனா உறுதியான நிலையில், இந்திய வீரர்கள் விளையாடும் சூழல் இல்லை என பிசிசிஐ -க்கு கடிதம் எழுதினர்.  இதனால், திட்டமிட்டபடி 5-வது போட்டி நடைபெறுமா.? அல்லது ஒத்திவைக்கப்படுமா..?  என்ற சந்தேகம் எழுந்த நிலையில்,கொரோனா எதிரொலி காரணமாக 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில்  4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan