ஜம்முவில் முதல் கொரோனா பலி.! 61 வயது பெண் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 5,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

 இதில் ஜம்மு பகுதியில் அண்மையில் ஒரு 61 வயது பெண்மணி காய்ச்சல் , நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டது. 

இதில் சிகிச்சை பலனின்றி அந்த 61 வயது பெண் உயிரிழந்தார். ஜம்மு பகுதியில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.