மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது!

மகாராஷ்டிராவில் மேலும் 11,416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 11,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,17,434 ஆக உயர்ந்தது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 308 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,040 ஆக உயர்ந்தது.

அங்கு 15,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,55,779 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 2,21,156 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.