#Breaking: தமிழகத்தில் கொரோனவால் 29 வயது பெண் உயிரிழப்பு.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1500-ஐ கடந்தது!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1, 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. அதற்கடுத்தப்படியாக, செங்கல்பட்டில் 8 பேர்  உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 36 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 435 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று கொரோனவால் 50 வயதிற்குட்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், சென்னையை சேர்ந்த 29 வயது பெண் உயிரிழந்துள்ளார்.