#Corona death: தமிழகத்தில் இன்று ஓரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு.

முதல் முறையாக இன்று ஓரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 25 பேர் தனியார் மருத்துவமனையிலும் 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 1,023 பேருக்கு கொரோனா, உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் குணமானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று 6,501 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

author avatar
murugan