#corona: தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,244 பேர் சிகிச்சையில் உள்ளனர்.