கோவை GH இல் பணிபுரியும் நர்ஸுக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னும் தனது வீரியத்தை குறைக்காமல் கோர முகத்தை உலகெங்கும் காண்பித்து வரும் நிலையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இந்த கொரோனா தனது வீரியத்தை காட்டிக் கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியக்கூடிய 19 வயது நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து அவர் தங்கியிருந்த விடுதியின் முதல் தளம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. 

author avatar
Rebekal