தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனாவை வென்ற தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,726 ஆக அதிகரித்துள்ளது. அதில் 7,130 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,668 ஆக அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,329 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 80 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும், 259 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மும்பை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.