பஞ்சாபில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பஞ்சாபில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,000-ஐ கடந்தது.

பஞ்சாபில் இன்று ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,889 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் இன்று 32 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 1,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,790 ஆக உயர்ந்துள்ள நிலையில், 8,463 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.