கொரோனா வந்தது நமக்கு மறைமுகமாக கிடைத்த ஆசிர்வாதம்! – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா வந்தது நமக்கு மறைமுகமாக கிடைத்த ஆசிர்வாதம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனாவால், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த  வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்,   மறைமுகமாக கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார். அதாவது, அடிக்கடி கை கழுவுதல், நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்  போன்ற நல்ல பழக்கங்களை கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.