மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கொரோனா! தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டது!

மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கொரோனா! தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டது!

மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கொரோனா வைரஸ்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக  நிலையில், இதனை கட்டுப்படுத்தும்  நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்  அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை காக்கும் பணியில், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்  வெளியில் வந்து பணி செய்கின்றனர்.

இந்நிலையில், மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை மாநகராட்சி சார்பில், அங்கு பணியாற்றும் 71 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 மேலும், மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு காவலர்கள் யாரும் பணிக்கு செல்ல  வேண்டாம் என, மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காவல்நிலையம் அடைக்கப்பட்டது.

இந்த காவல்நிலையத்தின் அலுவலக பணிகள் தற்காலிகமாக மாற்று இடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube