பிரதமருக்கு அருகிலிருந்த அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா உறுதி,தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க உ.பி. முதல்வர் உத்தரவு

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூஜையில் பிரதமருடன் பங்கேற்ற அறக்கட்டளை நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்க உ.பி. முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அண்மையில் பிரதமர் மோடி அவரகள் அடிக்கல் நாட்டு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அதிகமாக அவ்விழாவில் யாரையும் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளை நிர்வாகிகள்  மற்றும் உத்திர பிரதேச முதல்வர் ஆகியோர் மட்டுமே அம்மேடையில் பிரதமருடன் அமர அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று பிரதமர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அவ்விழாவில் பங்கேற்ற அறக்கட்டளை  தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவருக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.எனவே உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால் தாஸ்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மேதாந்தாவின் டாக்டர் ட்ரேஹனுடன் பேசினார். சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் மதுரா மாவட்டதிற்கு உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Rebekal