கொரோனாவால் 93% நாடுகளில் மனநல மைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது – WHO கணக்கெடுப்பில் அறிக்கை!

கொரோனாவால் 93% நாடுகளில் மனநல மைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது – WHO கணக்கெடுப்பில் அறிக்கை!

கொரோனாவால் 93% நாடுகளில் மனநல சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கணக்கெடுப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கடும் நெருக்கடி உண்டாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சற்றே தெரியவர்கள் கூட தற்பொழுது ஆரோக்கியம் குறைந்து மீண்டும் அதே நிலைக்கு மாறி உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 150 நாடுகளில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மனநோய் கொண்டவர்களுக்கான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதில் கொரோனாவால் கடுமையாக மனநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 193 நாடுகளில் 93% நாடுகள் தற்போது மனநல சிகிச்சைக்கு வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும், படுக்கை வசதிகூட இல்லாமல் மனநோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube