டெல்லியில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!

டெல்லியில் இன்று கொரோனா வைரசால் 25 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,37,217 பேர் ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று மட்டும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,079 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 2 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 14,11,690 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 69,160 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தற்போது 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.