கேரளாவில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கேரளாவில் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,212 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 19,478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,77,788 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,76,048 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.