பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என பிரதமர் மோடி உரை.
மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலை நம்மை மிகவும் மோசமாக தாக்கியுள்ளது. கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து வெளிவந்த நிலையில், 2வது அலை மோசமாக உள்ளது. தொற்று பரவலை மாநில அரசுகள் தங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்தித்து வருகிறோம். கொரோனா 2-வது அலையையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கிவிட்டது. கொரோனா 2-வது அலையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். உலகிலேயே இந்தியாவில்தான் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளன. அதை கொடுப்பதில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க பொதுமக்கள் மூச்சு பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து மாநில அரசுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவச தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
மேலும், கொரோனா தாக்குதல் நமது பொறுமை, வேதனையை தாங்கும் சக்தியை சோதித்து கொண்டிருக்கிறது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…