மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல்…!

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும்,  நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பேச்சு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், 2 மாதத்தில் போலீசார் விரைவில் விசாரணை முடித்து இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 3 ஆண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஏப்ரல் 27-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, ஜூன் 17-ம் தேதி, நீதிபதி இளங்கோவன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி கூறுகையில், எச்.ராஜாவுக்கு எதிராக திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அந்த குற்றப்பத்திரிக்கை நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 29-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

2 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

10 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

11 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

14 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

14 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

14 hours ago