கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சி..! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் கோடை வெயில் சுற்றுக்கும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மழை:

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நாளை ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்ப அலை 

இன்று முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.