பிக்பாஸில் வெடித்த சர்ச்சை! மன்னிப்பு கேட்ட சரவணன்! நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள சரவணன், தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்ததாக கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு கமலஹாசன் எந்த ஓரு கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், பார்வையாளர்களும் இவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சரவணனின் இந்த கருத்துக்கு நடிகை சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திங்களன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னை போல யாரும் தவறு செய்ய கூடாது என்றும், அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சரவணன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.