சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா காவல் நிலையத்தில் சரண்.!

சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா கடந்த சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தார்.

கேரளாவில் சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும்  சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதால் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தான் கைதாகாமல இருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இதனால் நேற்று பிற்பகல் கொச்சி கமிஷனரேட்டின் கீழ் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் பாத்திமா தன்னை சரணடைந்தார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு முறைகளை முடித்த பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த 2018 செப்டம்பரில் கேரள மாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் இருவரும் சபரிமலைக்கு சென்ற போது அங்கு இருந்த ஐயப்பன் பக்தர்களால் திருப்பி அனுப்பினர்.

ஆனால் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.பிறகு இந்த விவகாரத்த்தில் தலையிட்ட கேரளா அரசு அவர்களை திருப்பி அனுப்ப போலீசாருக்கு உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.

இந்த சூழலில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனு 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டும் ரெஹானா பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தனக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேரளா காவல்துறைக்கு மனு அனுப்பினார்.ஆனால் கேரளா காவல்துறை ரெஹானா பாத்திமாவிற்கு எந்தவித பாதுகாப்பும் கொடுக்கமுடியாது என கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

1 min ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

40 mins ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

1 hour ago

ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…

1 hour ago

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

2 hours ago

அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

2 hours ago