கொரோனா’ சிகிச்சைக்கு, ‘ரோபோ’ தயார் -இலவசமாக தரும் தனியார் நிறுவனம்

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில்  திருச்சியில் புரபெல்லர் டெக்னாலஜிஸ் (propeller technologies ) என்ற ரோபோட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது . சமீபத்தில் இந்த நிறுவனம் ‘ஜாபி’ (zafi robot)என்ற  ரோபோக்களை தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முகமது ஆஷிக் ரகுமான், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த முன்வந்தால், இலவசமாக வழங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.