தொடரும் அலட்சியம்…! ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது குழந்தை…!

தொடரும் அலட்சியம்…! ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது குழந்தை…!

  • ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.
  • குழந்தையை மீட்கும் பணி தீவிரம்.

சமீப காலமாக ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அலட்சியமாக மூடாமல் விடுவதால், குழந்தைகள் இந்த கிணற்றிற்குள் விழும் சம்பவங்கள் நடக்கிறது.

அதிகரிகாரிகள் இது தொடர்பாக எச்சரித்து வந்தாலும், சிலர் அலட்சியப்போக்காக தான் செயல்படுகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube