ஆன்லைன் ரம்மியால் தொடரும் மரணங்கள் – இளைஞர் தற்கொலை..!

நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே சிவன் ராஜ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை இழந்ததால் தற்கொலை. 

இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்கள் தங்களது பணத்தை இழப்பதோடு, பண இழப்பை தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கிறனர். இதனால் பாதிக்கப்படுவது என்னமோ அவர்களது குடும்பத்தார் தான்.

ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே சிவன் ராஜ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார். நேற்று மட்டும் அவர் ஒரு லட்சத்தை  இழந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார் பணத்தை இழந்த அவர் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment