துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஆலோசனை

துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று  அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. ஆனால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.கூட்டம் நிறைவடைந்த பின் ,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறுகையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.எனவே முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என தெரிவித்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.