பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை.! காங். செய்தி தொடர்பாளர் விமர்சனம்.!

பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா விமர்சனம் செய்தார். 

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் / முன்னணி நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த முன்னிலை நிலவரம் குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா  கூறுகையில் , காங்கிரஸ் கார்நாடகாவில் யாருடைய துணையும் இன்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமரின் எதிர்ப்புவாத மற்றும் பிரித்தாளும் பிரச்சாரங்கள் கர்நாடக மக்களிடையே பலநிலைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.