நாடாளுமன்ற மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு.!

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு.!

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியது. அதில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் போன்ற முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் மக்களவை தொடங்கியது. அப்போது, இந்திய எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, அமைச்சரின் ராஜ்நாத் சிங் அறிக்கையை தொடர்ந்து, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தினர். கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காந்தி சிலைக்கு முன்பு காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube