காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தற்போது தனது முடி அளவை குறைத்து தாடி அளவாக வைத்து புது தோற்றத்தில் இருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அண்மையில் தான் தனது ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார். கன்னியாகுமரியில் ஆரம்பித்த அவரது ஒற்றுமை யாத்திரை பல மாநிலங்களை கடந்து காஷ்மீரில் நிறைவடைந்தது.
ஒற்றுமை யாத்திரை அதன் பிறகு பட்ஜெட் கூட்ட தொடர் என அடுத்தடுத்த நிகழ்வுகளில் ராகுல்காந்தி கலந்து கொண்டதால், அவரது முகத்தில் வளர்ந்த தாடி மற்றும் முடியை சரி செய்யாமல் வளர்த்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் புதிய தோற்ற பரிமாணத்தில் இருக்கிறார். இதில் தாடியை முழுதாக எடுக்காமல், ஓரளவு வைத்துக்கொண்டு, தலை முடி அளவை குறைத்து தற்போதுள்ள இளம் வயதினர் தோற்றத்தில் இருக்கிறார். இந்த புதிய தோற்றம் காங்கிரஸ் தொண்டர்கள் பலரை கவர்ந்துள்ளளது.