காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இதனால்  3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.மேலும்  கர்நாடகாமுதல்வர் குமாரசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.எனவே 3ம் அணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை கேசிஆர் சந்திக்கும் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Comment