சொராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி : ஸ்மிருதி இரானி…!!

சொராபுதீன் கொலை வழக்கில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் ரீதியாக சதி செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சொராபுதீன் வழக்கு அரசியல் ரீதியாக புனையப்பட்டதாகவும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

2010ஆம் ஆண்டு, அமித்ஷாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சிபிஐ அமைப்பை காங்கிரஸ் பயன்படுத்தியதாக தெரிவித்த ஸ்மிருதி இரானி, உருவாக்கப்பட்ட வழக்கிற்காக சிபிஐ சாட்சிகளை ஏற்படுத்தியதாக கூறினார். மேலும், காங்கிரஸ் உத்தரவின் பேரில் தான், 2010ஆம் ஆண்டு, அமித் ஷா கைது செய்யப்பட்டதாகவும் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment