விவசாயி ஆன தேவயானி.! குவியும் வாழ்த்துக்கள்.!

நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.

இவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதனை அறிந்த, தேவயானி அவரிடம் பேசி அந்த 2 ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்து வாங்கி, பின்அதை விவசாய நிலமாக மாற்றி, தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.

அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை விவசாயியாக மாறியதுடன் மட்டுமில்லாமல், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றியதற்காக தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.