ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் – ஆணையம்

ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ரஜினிகாந்திடம் ஏற்கனவே விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்