வாக்கு எண்ணும் பணியில் உள்ளோருக்கு பரிசோதனை கட்டாயம்..!

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேத்தி நடைபெற்றவுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பதுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் ஏப்ரல் 28-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசியல் கட்சி முகவர்களுக்கும் ஏப்ரல் 28-ம் தேதி கொரோனா பரிசோதனை.

அரசியல் கட்சி முகவர்களுக்கு ஏப்ரல் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan