முகவர்கள் சென்ற பின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டதாக புகார்…..!

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும், காலை முதல் வரிசையில் காத்திருந்து, மிகவும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற முகவர்கள், தேர்தல் அலுவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து விளக்கமளித்த, தேர்தல் அலுவலர்கள், வாக்கு இயந்திரத்தில் பேட்டரியை எடுக்காமல் சீல் வைத்ததால், சீலை உடைத்து பேட்டரியை எடுத்ததாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.