கொரோனா பாதிப்புகளை கண்காணிக்க குழு அமைப்பு- அரசு அரசாணை வெளியீடு..!

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை ஆய்வு செய்து அவ்வப்போது தேவையான அறிவுரைகளை தமிழக அரசிற்கு வழங்குவது தொடர்பாக தற்போது ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

இந்த குழுவில் அரசு அலுவலர்கள் இல்லாதவர்கள் 4 பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட ஒன்பது பேரும் இந்த குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழு அரசுக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல் கூட்டங்களை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்ளவது, தொடர் கண்காணிப்பில் மேற்கொண்டு அரசு தேவையான தகவலை தெரிவிப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப இந்த குழுவின் உறுப்பினர்களையும் அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
murugan